'ஆடி கார் தான் இருக்கு, சொகுசு கார் இல்லன்னு சொன்னீங்க'... 'நான் இப்போ என்ன நிலமையில இருக்கேன்னு தெரியுமா'?... குமுறிய பப்ஜி' மதனின் மனைவி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தன்னுடைய வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டும் என்றும் கோரி, பப்ஜி மதன் மனைவி கிருத்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பப்ஜி விளையாட்டில் ஆபாசமாகப் பேசி வீடியோ பதிவேற்றம் செய்த வழக்கில் மதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அதோடு பப்ஜி விளையாட்டைப் பயன்படுத்தி அவர் பண மோசடிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து, மதனும், அவரது மனைவி கிருத்திகாவும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதன், கிருத்திகா மீதான குற்றப் பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே மதன் மீது நிறையப் புகார்கள் இருந்தாலும், கொரோனா காலத்தில் உதவி செய்வதாகச் சொல்லி ரூ.2 கோடியே 89 லட்சம் பண மோசடி செய்துள்ளது தான் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேரை ஏமாற்றி பணம் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, மதனின் மனைவி கிருத்திகாவை 2-வது குற்றவாளியாக இந்த வழக்கில் போலீசார் சேர்த்தனர்.

கிருத்திகா தற்போது ஜாமீனில் உள்ள நிலையில், தன்னுடைய வங்கிக்கணக்கைத் திறக்க உத்தரவிடக்கோரி, கிருத்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கிருத்திகாவின் வங்கிக் கணக்கை ஏற்கனவே போலீசார் முடக்கம் செய்திருந்தனர். அந்த வங்கிக் கணக்கில் 3 கோடி ரூபாய் மோசடி பணம் இருந்ததாகக் கூறப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் அந்த 3 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் சேர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலைத்தான் குற்றப்பத்திரிகையிலும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில் கிருத்திகா, தனக்குச் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லை, வாழ்வாதாரமே சிரமமாக உள்ளதால், தன்னுடைய வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டும் என்றும், அதற்கான உத்தரவை சைதாப்பேட்டை வங்கிக்கு வழங்க வேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். முன்னதாக தன்னிடம் ஆடி கார் மட்டுமே உள்ளது என்றும், சொகுசு கார் தன்னிடம் இல்லை எனவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்