'என்னங்க சொல்றீங்க'... 'ஒரு மாச வருமானம் இத்தனை லட்சமா'?... 'மனைவி சொன்ன பல அதிர்ச்சி தகவல்கள்'... தோண்ட தோண்ட வரும் ரகசியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆபாசமாக யூ-டியூப் சேனலில் பேசிவந்ததாகத் தேடப்படும் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

தடை செய்யப்பட்ட "பப்ஜி" ஆன்லைன் விளையாட்டைச் சட்டவிரோதமாக விபிஎன் எனும் இணையச் சேவை மூலம் பயன்படுத்தி சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசியதாக பப்ஜி மதன்மீது புகார்கள் எழுந்தது. அதனையொட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதனைத் தேடிவந்தனர். அவர்மீது தமிழகம் முழுவதும் 159 புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவில் நவீன தொழில் நுட்ப வசதி கொண்ட சைபர் ஆய்வகம் இருப்பதால், தொழில் நுட்ப உதவியுடன் தப்பிக்கும் மதனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் பெருங்களத்தூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து மதனின் தந்தை மாணிக்கம் மற்றும் அவருடைய மனைவி கிருத்திகாவை விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அழைத்துவந்தனர். இன்று காலையிலிருந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபிறகு, மதனின் மனைவி கிருத்திகாவை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அப்போது கிருத்திகா பல அதிர்ச்சி தகவல்களை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

மதன் நடத்தும் சேனலின் நிர்வாகியாக கிருத்திகா இருந்து வந்துள்ளார். அதோடு மதனின் நடவடிக்கைகள் அனைத்தும் கிருத்திகாவுக்குத் தெரிந்தே நடந்துள்ளது. மேலும், மதன் ஆபாசமாகப் பேசும்போது எதிர்த்தரப்பில் பேசும் பெண்ணின் குரல் அவருடைய மனைவியினுடையது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மதனுக்கு யூ-டியூப் மூலம் மட்டும் மாதம் தோறும் 7 லட்ச ரூபாய் வருமானம் வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இரண்டு உயர் ரக சொகுசு கார்களை மதன் வாங்கியதும் தெரியவந்துள்ளது. இந்த கார்களை பறிமுதல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, பப்ஜி மதனால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகப் புகாரளிக்க முன்வர வேண்டும் எனவும், புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கூறியுள்ளது. அதே நேரத்தில் மதனின் மனைவி கிருத்திகாவிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்