மளமளவென குவிந்த புகார்கள்!.. வரிசை கட்டி நின்ற சாட்சியங்கள்!.. பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவுக்கு செக் வைத்த காவல்துறை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

யூடியூபில் ஆபாசமாகப் பேசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் வழக்கில் 1,600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா கால ஊரடங்கில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி பெற்றதாக பப்ஜி மதன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்த வழக்கில் பப்ஜி மதனை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், பப்ஜி மதன் மீதான வழக்கில் 1,600 பக்க குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்துள்ளது.

மேலும், இந்த குற்றப்பத்திரிகையில் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, இதுவரை மதன் மீது 150 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 32 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனவும் போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்