சென்னையில் நாளைக்கு (ஆகஸ்ட்-05) பவர் 'ஷட் டவுன்' இருக்கு மக்களே...! எந்தெந்த பகுதியில்...? - கரெக்ட்டா 'எத்தனை' மணிக்கு 'கரண்ட்' போகும்...?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் நாளை (05-08-2021) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் விநியோகம் வழக்கம்போல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளான எல்.ஐ.சி காலனி ஒரு பகுதி, டி.ஆர் மணி தெரு, அண்ணாசாலை பகுதி, எம்.ஜி.ஆர் ரோடு, ஐஐடி காலனி, காமகோடி நகர், விஜிபி சாந்தி நகர், சர்ச் அவென்யூ, நெமிலிச்சேரி மெயின் ரோடு பகுதி, பாலசுப்பரமணியன் தெரு, முத்துசாமி நகர், பாத்திமா நகர், 200 அடி ரோடு, பெரிய கோவிலம்பாக்கம் போன்ற பகுதிகளில் நாளை மின்தடை உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சோத்துப்பெரும்பேடு சுற்றுவட்டார பகுதிகளான அலிமாடு, அட்டபாளையம், பாளையம், மாட்டுசூரப்பாடு, பள்ளசூரப்பாடு, ஒரக்காடு ஆகிய பகுதிகளிலும், கிண்டி பகுதியில் நங்கநல்லூர், முவரசம்பேட்டை, ஆலந்தூர், சென்ட் தாமஸ் மௌன்ட், ஆதம்பாக்கம், டி.ஜி நகர், புழுதிவாக்கம் போன்ற பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

செங்குன்றம் பகுதிகளான அழிஞ்சிவாக்கம், செல்வவிநாயக நகர், விளங்காடுபாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூர், கோமதி அம்மன் நகர் பகுதியிலும், ஆவடி பகுதிகளான காமராஜ் நகர் த.வீ வசதி வாரியம் பயர் ஸ்டேஷன் பகுதி, பாண்டியன் நகர், லட்சுமி நகர், அசோக் நகர், ஸ்ரீராம் நகர், மூர்த்தி நகர், லட்சுமிபுரம் பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும், பம்மல் ,மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பழைய சாந்தி ரோடு, அப்துல் பாரூக் தெரு, முத்தமிழ் நகர், அரகநாதன் நகர், கிருஷ்ணா நகர், மூங்கிலேரி மற்றும் பம்மல் மெயின் ரோடு ஆகிய இடங்களிலும் நாளை (05-08-2021) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்