Ponniyin Selvan : மணிரத்னத்தை நேரில் சந்தித்து இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி வாழ்த்து!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, பிரபல இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் 1" கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது.

முதல் நாளிலேயே பொன்னியின் செல்வன் படம் 80 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது வரை 400 கோடி ரூபாய்க்கு மேல் உலகளவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மிக பிரபலமான நாவலை திரை வடிவில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ள இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினரை பலரும் பாராட்டியும் வருகின்றனர். இதன் காரணமாக, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸையும் ரசிகர்கள் பலரும் எதிர்நோக்கி காத்திருந்து வருகிறார்கள்.

இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், பிரபல இயக்குனர்கள் சிலர் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தின் இயக்குனர் மணிரத்னத்தை நேரில் சந்தித்து தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார், பேரரசு, ஆர்கே செல்வமணி உள்ளிட்டோர் நேரில் சென்று இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்து பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பான புகைப்படங்களை இயக்குனர் ஆர்வி உதயகுமார் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

PONNIYIN SELVAN 1, PS1, MANIRATNAM, PERARASU, RV UTHAYAKUMAR, RK SELVAMANI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்