‘காதலனை கல்யாணம் பண்ண காசு இல்ல’.. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நடந்த கொடுமை.. CCTV-ல் சிக்கிய இளம்பெண்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்மமாக உயிரிழந்த வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

பொள்ளாச்சி மாரியப்பன் வீதியைச் சேர்ந்தவர் மூதாட்டி நாகலட்சுமி (வயது 72). இவருக்கு செந்தில் வேல் என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். அதில் தனது மகனுடன் நாகலட்சுமி வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று காலை செந்தில் வேல் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார். இதனை அடுத்து அவரது தாய், வீட்டில் மர்மமாக இறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்துள்ளனற். இதனால் அதிர்ச்சியடைந்து அவர், வீட்டில் வந்து பார்த்தபோது சோபாவில் தாயின் உயிரிழந்து கிடந்துள்ளார். மேலுக் அவர் அணிந்திருந்த 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமாரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் செந்தில் வேலின் வீட்டுக்குள் சென்றது தெரியவந்துள்ளது. உள்ளே சென்ற அவர் ஒரு மணிநேரம் கழித்து திரும்பி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதனால் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது காதலுடன் ஓடிச் சென்று திருமணம் செய்ய அப்பெண் திட்டமிட்டிருந்துள்ளார். ஆனால் அதற்கு பணம் இல்லாததால், மூதாட்டியை கொன்று அவரிடமிருந்த நகையை திருடியதாக போலீசாரிடம் அப்பெண் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அந்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருடிய 15 சவரன் நகை அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. காதல் திருமணம் செய்ய பணம் இல்லாததால் இளம்பெண் ஒருவர் மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொன்று நகையை திருடிய சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CCTV, POLLACHI, WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்