என்ன பஸ் ரொம்ப நேரமா பின்னாடியே வந்திட்டு இருக்கு.. கடைசியில் தெரிய வந்த உண்மை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புறவழிச் சாலையில் நீண்ட நேரமாக பேருந்து பின்னோக்கி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

வெளியூரில் இருந்து துக்க வீட்டுக்கு வந்த பெண்.. ஆனா இப்படி ஆகும்னு யாரும் நெனச்சிருக்கமாட்டாங்க.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இருந்து சிவகாசிக்கு சென்ற அரசு பேருந்தில் பயணி ஒருவர் வள்ளியூரில் ஏறியுள்ளார். இதனை அடுத்து அவரது நிறுத்தம் வந்ததும் நடத்துனரிடம் சென்று பேருந்தை நிறுத்த கூறியுள்ளார். ஆனால் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் நீண்ட தூரம் சென்று உள்ளது.

இதனால் அந்த பயணி நடத்துனரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இரு நாட்களுக்கு முன்பு இதே நிறுத்தத்தில் பயணியை தாக்கி நடத்துனரும், டிரைவரும் நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். அதனால் பேருந்து நடத்துனரும், ஓட்டுனரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனால் வேறு வழியின்றி டிரைவர் பேருந்தை பின்னோக்கி அணுகுசாலை வரை கொண்டு வந்தார். பின்னர் பயணி இறங்கவேண்டிய ஊருக்குள் இறக்கி விட்டு சென்றுள்ளனர். நீண்ட நேரமாக பேருந்து பின் நோக்கி வருவதை அறிந்த பலரும் சந்தேகத்துடன் நின்று பார்த்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போ நெறைய பேர் ‘டேட்டிங்’ ஆஃப்பை இதுக்குதான் யூஸ் பண்றாங்களா..? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

PASSENGER, DRIVER, BUS STOP, திருநெல்வேலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்