சந்தையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலம்.. திருப்பூரில் அடுத்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூரில் கை, கால்கள் கட்டப்பட்டு வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

VIDEO: செல்போனை பார்த்திட்டே ஓட்டைக்குள் விழுந்த வாலிபர்.. நல்லவேளை கீழே அது இருந்ததுனால பொழச்சிட்டாரு..!

திருப்பூர்

திருப்பூர் காட்டன் மார்க்கெட்டில் உள்ள தினசரி சந்தைக்கு வழக்கம்போல் வியாபாரிகள் வந்துள்ளனர். அப்போது அங்குள்ள விநாயகர் கோயில் பின்புறம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதை பார்த்த வியாபாரிகள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பெயிண்டர்

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் உயிரிழந்த நபர், தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பதும், இவர் அப்பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மது பாட்டில்கள்

சடலம் கிடந்த இடத்தில் மது பாட்டில்கள் கிடந்ததால், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து அதிர்ச்சி

சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் கால்வாய் ஒன்றில் சூட்கேஸில் அடைக்கப்பட்டு பெண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இந்த சூழலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொட்டை தலை, போலி பாஸ்போர்ட்.. ‘இவர் தான் அவர்’.. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்.. விரைந்து வந்த கேரள போலீஸ்..!

PAINTER, DEAD, TIRUPPUR MARKET, ஆண் சடலம், பெயிண்டர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்