மீண்டும் ஒரு ‘விசாரணை கைதி’ மருத்துவமனையில் அனுமதி.. ‘கோவில்பட்டியில்’ அடுத்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து மேலும் ஒரு விசாரணை கைதி உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ் (56). இவரது மகன் பென்னிக்ஸ் (31). கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்திருந்ததாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக கோவில்பட்டி சிறையில் அடைத்தனர்.

இதனை அடுத்து தந்தை, மகன் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் கோவில்பட்டு கிளைச் சிறையில் இருந்த மேலும் ஒரு விசாரணை கைதி உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் பனைகுளத்தை சேர்ந்த ராஜா சிங் என்பவர் விசாரணை கைதியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு விசாரணை கைதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்