ப்பா...நூறு ஆயுசு.. மழையால் முறிந்து விழுந்த மரம்.. நூலிழையில் தப்பித்த வாகன ஒட்டி.. திக்..திக்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கொரட்டூர் பகுதியில் பழமையான மரம் ஒன்று மழையால் முறிந்து விழும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
![ப்பா...நூறு ஆயுசு.. மழையால் முறிந்து விழுந்த மரம்.. நூலிழையில் தப்பித்த வாகன ஒட்டி.. திக்..திக்.. வீடியோ..! ப்பா...நூறு ஆயுசு.. மழையால் முறிந்து விழுந்த மரம்.. நூலிழையில் தப்பித்த வாகன ஒட்டி.. திக்..திக்.. வீடியோ..!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/old-tree-falls-in-chennai-due-to-heavy-rain-video-thum.png)
Also Read | மண்டை பத்திரம்.. 8 KG எடைகொண்ட 'கருங்கல்' ஹெல்மெட்.. முரட்டு ஐடியாவே இருக்கே.. வைரலாகும் வீடியோ..!
இந்திய அளவில் தென்மேற்கு பருவ மழையின்போது பெரும்பாலான மாநிலங்கள் மழையை பெறும் என்றாலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது மட்டுமே கணிசமான மழைப் பொழிவு இருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையானது கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில் நாளை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் நவம்பர் 6 ஆம் தேதிவரையில் கனமழை நீடிக்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்திருக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை ஒட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு காற்றின் தீவிரம் காரணமாகவும் தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் மட்டும் அல்லாது காரைக்கால் மற்றும் புதுவை ஆகிய இடங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
தலைநகரான சென்னையில் நேற்று முதலே பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கொரட்டூர், எழும்பூர், வேப்பேரி, பெரிமேடு, திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை நீடித்தது. இந்நிலையில் கொரட்டூர் பகுதியில் மழையால் பழமையான மரம் ஒன்று முறிந்து விழும் சிசிடிவி வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சாலையில் மக்கள் பரபரப்புடன் சென்று கொண்டிருக்க, ஓரத்தில் இருந்த மரம் மெல்ல தணிந்து நிற்கிறது. அப்போது இருசக்கர வாகனவோட்டி ஒருவர் அந்த இடத்தை கடக்கிறார். சரியாக அவர் மரத்தை கடந்த அடுத்த வினாடியில் மரம் முறிந்து சாலையில் விழுகிறது. இதனால், அந்த வாகன ஓட்டி நூலிழையில் உயிர் தப்பினார். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | மாமன்னர் ராஜராஜ சோழரின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்.. முதல்வர் முக. ஸ்டாலின் அறிவிப்பு..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மேகம் கருக்குது.. கொட்டித் தீர்த்த மழை.. குஷியாக கொண்டாடிய போதை ஆசாமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
- கனமழை எதிரொலி.. 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. இந்தப் பகுதி மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்.. எச்சரித்த வெதர்மேன்..!
- தேசிய சுற்றுலா சென்ற அரசு பள்ளி மாணவர்கள்.. வழியனுப்பி வைத்த மேயர் பிரியா.. சபாஷ் சொல்ல வைக்கும் பின்னணி..!
- "இன்னைக்கு நைட்டும் நாளைக்கும் இந்த 4 மாவட்டங்கள்ல இருக்கவங்க Safe-ஆ இருங்க".. வெதர்மேன் சொல்லிய தகவல்.. முழுவிபரம்..!
- 2 நாளைக்கு தட்டி வீசப்போகுது மழை.. இந்த இடங்கள்லாம் மிக கனமழை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்..
- 24,679 வைரங்கள்.. 3 மாச உழைப்பு.. சென்னை மாலில் கின்னஸ் சாதனை படைச்ச வைர மோதிரம்.. வியப்பில் ஆழ்ந்த மக்கள்!!
- நொடியில் பறந்து போன கோழி... புதுவீட்டுக்கு திருஷ்டி கழிக்கச் சென்ற தொழிலாளி பலி .!!
- 200 வருசத்துல முதல் முறை.. மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்.. அமைச்சர் முன் ஜோராக நடந்த திருமணம்!!..
- ரொம்ப தூரம் போயிட்டியா ராம்?.. பெருங்களத்தூர தாண்டல ஜானு .. சென்னை டிராஃபிக்கில் தீபாவளி வெளியூர் பயணம்.. பறக்கும் மீம்ஸ்.
- “வேலை செய்ற இடத்துல இனி இவங்களுக்கு இந்த வசதிலாம் இருக்கணும்!".. மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு.!