‘மணிக்கு 5 கி.மீ. வேகத்தில்’... ‘மீண்டும் நகரத் துவங்கிய நிவர் புயல்’... ‘நாளை காலை அதிதீவிர புயலாக மாறும்’... ‘வானிலை மையம் தகவல்’...!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல், தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில், வங்கக்கடலில் ‘நிவர் புயல்’ உருவாகியுள்ளது. இந்த புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு வேண்டாம் என்றும் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருவதோடு, தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் தயார் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் வேகம் 4 கி.மீ வேகத்தில் இருந்து 5 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நிவர் புயல் 3 மணிநேரமாக ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் நிவர் புயல் நகர துவங்கியுள்ளது.

சென்னைக்கு தென்கிழக்கில் 430 கிலோ மீட்டர், புதுச்சேரிக்கு அருகே 380 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருக்கும் நிவர் புயல்,  வடமேற்கு திசையில் நகர்ந்து, அதிதீவிர புயலாக நாளை காலை மாறி, புயலின் கண் பகுததி நாளை மாலை புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

அப்போது மணிக்கு 120  முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் சில நேரத்தில் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்