VIDEO: “40 வயதில் நாடு நாடாக பிச்சை எடுத்து..!” ரகசியத்தை உடைத்த நித்தியானந்தா..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தனி நாடு உருவாக்கியது குறித்து நித்தியானந்தா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

காவல் துறையால் பல வழக்குகளில் தேடப்படுபவர் நித்தியானந்தா. இவர் ‘கைலாசா’ என்ற தனி நாட்டை உருவாக்கி அங்கு குடியிருப்பதாக வீடியோ வாயிலாக கூறி வருகிறார். அவ்வப்போது வீடியோ வெளியிட்ட தனது இருப்பை நித்தியானந்தா வெளிப்படுப்பத்தி வருகிறார். அதில், சில நேரம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் கூறி சிக்கலில் மாட்டிக்கொள்வதும் உண்டு.

அந்த வகையில் கைலாசா நாட்டை உருவாக்கியது குறித்து நித்தியானந்தா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், ‘என்னோட வாழ்க்கையை பாருங்கள். இளமை பருவத்தில் வீடு வீடாக பிச்சை எடுத்து இந்து மதத்துக்காக ஒரு வீடு கட்டினேன். 20-ம் வயதில் தெருத்தெருவாக பிச்சை எடுத்து இந்து மதத்துக்காக ஒரு தெருவையே கட்டிவிட்டேன்.

30-ம் வயதில் ஊர் ஊராக பிச்சை எடுத்து இந்து மதத்துக்காக ஒரு ஊரையே கட்டிட்டேன். 40-ம் வயதில் நாடு நாடாக பிச்சை எடுத்து இந்து மதத்துக்காக ஒரு நாட்டையே கட்டிட்டேன்’ என நித்தியானந்தா கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

NITHIYANTHA, KAILASA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்