அறுவை சிகிச்சையை மறைத்த மணமகன்.. அதிர்ந்துபோன மணப்பெண்.. 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்த திருமணம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூரில் திருமணமான ஒரே நாளில் மணமகனை வேண்டாம் எனக்கூறி பிரிந்திருக்கிறார் மணப்பெண். இது அவ்வட்டார மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | குறையை கண்டுபிடிச்சு சொல்றவங்களுக்கு ரூ. 25 லட்சம் பரிசு.. கூகுள் வெளியிட்ட வெயிட்டான அறிவிப்பு..!

திருப்பூர் பிஎன்ரோடு பூலுவப்பட்டி தெருவைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஒருவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. மணமகன் உள்ளூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இருவரின் வீட்டிலும் கல்யாண ஏற்பாடுகள் நடந்து வந்திருக்கின்றன. இதனையடுத்து நேற்று இருவீட்டார், நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது.

வரவேற்பு

திருமணம் முடிந்த பிறகு வரவேற்பு நடைபெற்றது. தனியார் திருமணம் மண்டபம் ஒன்றில் நடந்த இந்த வரவேற்பு விழாவில் உள்ளூர் மக்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். அப்போது, இருவருக்கும் அவர்களுடைய உறவினர்கள் சீர்வரிசை செய்திருக்கிறார்கள். அப்போது மணமகனின் காலை பார்த்த இளம்பெண் அதிர்ச்சியடைந்திருக்கிறார். மாப்பிள்ளையின் 2 கால்களில் ஒருகால் மட்டும் வித்தியாசமாக இருப்பதை அறிந்த இளம்பெண் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அப்போது, பணியின்போது விபத்தில் காலில் அடிபட்டதாகவும், அதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் மணமகன் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தன்னிடம் முன்பே ஏன் இதுகுறித்து தெரிவிக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

credit : ipleaders

முறிந்துபோன திருமணம்

இதனால் கல்யாண மண்டபமே பரபரப்பானது. இதனையடுத்து இருவீட்டாரும் மணப்பெண்ணை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், இந்த திருமணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை எனக்கூறியிருக்கிறார். இதனால் இருவீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, திருப்பூர் கொங்குநகர் சரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு இருவீட்டார் சென்றிருக்கின்றனர். அப்போது மணமகனுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ததை மறைத்துவிட்டதாக  மணமகள் மற்றும் அவரது வீட்டினர் தெரிவித்துள்ளனர்

இதனையடுத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் இருவரும் பிரிந்து செல்ல ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இரு குடும்பத்தினரும் தனித்தனியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். திருப்பூரில் திருமணம் நடந்த அன்றே மணமக்கள் பிரிந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | புருஷன் வெளிநாட்டுல இருக்காரு.. தொழிலதிபரை வீட்டுக்கு வரவழைத்த இளம்பெண்.. கொஞ்ச நேரத்துல கேட்ட அலறல் சத்தம்..!

TIRUPPUR, NEWLYWED, BRIDE, GROOM, LEG SURGERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்