“ஹனிமூனுக்கு தனியா போலாம்னு சொன்னேன்.. எடிட்டிங்ல போயிடுச்சு”.. சரண்டர் ஆன கணவர்.. NEEYA NAANA வைரல் தம்பதி ஜாலி பேட்டி..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் மனைவிமார் தரப்பினர் கணவரின் நட்பு வட்டம் தங்களுக்கு தொல்லையாக இருப்பதாக பேசினர்.

Advertising
>
Advertising

அதில் பெண் ஒருவர் தன் கணவர் தன்னுடன் நேரம் செலவிடுவதில்லை என்றும் எப்போது அவுட்டிங், டின்னர் சென்றாலும் நண்பர்களுடன் செல்கிறார், அல்லது நாங்கள் போகும்போது நண்பர்களும் வந்துவிடுகின்றனர் என கோபிநாத்திடம் ஜாலியாக புகார் அளித்ததுடன், இத்தனைக்கும் ஹனிமூன் டிரிப் போகும்போது கூட நண்பர்கள் உடன் வந்தனர். நான் அவரிடம் தனியே பேச நினைத்தேன். இதெல்லாம் செய்ய முடியாமல் போனது என பொசசிவாக சொல்கிறார்.

இதுகுறித்து அவரது கணவரிடம் கோபிநாத் விசாரிக்கும்போது,  அவரோ, “நீண்ட நேரம் பேசவும் முடியாது, அவங்களுக்கும் போர் அடிக்கும். பொதுவாக ஆபீஸ் கெட் டுகதரில் நண்பர்களுடன் செல்வேன். அதேபோல் வெளியூர், டின்னர், அவுட்டிங் செல்லும்போது நண்பர்களுடன் சென்று பழகிவிட்டேன், அது பேச்சிலராக இருந்து வந்ததால் திடீரென குடும்ப வாழ்க்கை பொறுப்புகளை எதிர்கொள்வதால் இப்படியா என தெரியவில்லை. நான் சில வேளைகளில் அவரை தனியே அழைத்துச் சென்றுள்ளேன், இருப்பினும் நண்பர்களும் உடன் வரும்பொழுது இன்னும் கொஞ்சம் போரடிக்காமல் அந்த பயணங்கள் ஜாலியாக மாறும் என்பதால் தான்” என கூறினார்.

இருவரின் பதில்களையும் பார்த்த பின்பு கோபிநாத் அந்த இளைஞரிடம், “புரிகிறது. ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் ஜாலியாக இருக்க வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்க கூடாது. குடும்ப வாழ்க்கை அனைத்தும் உணர்வுகளுக்குமானது. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். போரடித்தாலும் அவர்களின் முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு, குழந்தைகளுடனும் வீட்டிலும் நேரம் செலவிட்டு அதிலேயே மகிழ்ச்சியுடன் இருப்பது எப்படி என கற்க வேண்டும். உங்கள் மனைவி தன் மனதில் இருப்பதையே இங்கு வெளிப்படுத்துகிறார்.!” என நெகிழ்ச்சியுடன் அட்வைஸ் செய்தார்.

இந்த நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்த இந்த வைரல் தம்பதியினர், (அரவிந்த் - சாய் பாரதி)பல்வேறு சுவாரசியமான மற்றும் ஜாலியான விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றனர். குறிப்பாக, 8 நண்பர்களுடன் ஹனிமூன் சென்றதற்கான காரணத்தை அரவிந்த், சொல்லும் பொழுது, “என் நண்பன் ஒருவன் ஹனிமூனுக்கு அந்தமான் சென்று இருந்தான். அப்போது மூன்றாவதாக புகைப்படம் எடுக்க கூட ஓர் ஆளில்லை. வெகு நேரம் அமைதியாக இருக்க வேண்டியது இருக்கும். ஒரு கட்டத்தில் போர் அடித்தால் பேச முடியாது. சண்டை வந்துவிடும். சமாதானம் பண்ண வேண்டும். இப்படித்தான் ஹனிமூன் நாட்கள் சென்றது என்று எனக்கு அறிவுறுத்தி இருந்தான். எனவே நண்பர்களுடன் அவுட்டிங் சென்று விட்டால் ஜாலியாக இருந்து விடலாம் என்பது தான் நான் யோசித்தது.” என கூறியுள்ளார்.

இதேபோல் அரவிந்த்தின் மனைவி சாய் பாரதி கூறும்பொழுது, “நான் வைத்த புகாருக்கு சப்போர்ட் அதிகம் வந்துவிட்டது. நான் இவர் மாப்பிள்ளை பார்க்க வரும் பொழுது இவரை பார்த்தவுடன் பிடிக்கவில்லை, இவர் பேசும் பொழுது தான் பிடித்தது, எனவே ஜாலியாக பேசுகிறார். வெளியில் எல்லாம் அழைத்துச்செல்வார் போல என்று நினைத்தேன். ஆனால் எப்போது எங்கு சென்றாலும் நண்பர்களுடன் மட்டுமே கூட்டி செல்வார். அந்த ஹனிமூன் ட்ரிப்பில்  நண்பர்கள் எங்களுடன் வருவதில் என்ன விஷயம் என்றால் சிறு சிறு விஷயம் என்றாலும் அவர்களுக்கும் சேர்த்து பார்க்க வேண்டியது இருக்கும். அவுட்டிங் சென்றாலும் நண்பர்களுடன் மட்டுமே செல்கிறார், ஒரு உணவு வாங்கி ஒரு தனி டைனிங் என பிரைவேசியாக பேச நினைப்பேன். இவை குறித்தே நான் சொன்னேன்” என்று கூறினார். 

அப்போது பேசிய அரவிந்த், “எனக்கும் இவரை அரேஞ்ச் மேரேஜ் பார்த்து தான் திருமணம் செய்து வைத்தார்கள். நான் என்னை பற்றி எல்லாமே சொல்லிவிட்டேன், ஹனிமூனுக்கு தாய்லாந்து போவது எங்கு தங்கலாம், என்ன ஆக்டிவிட்டீஸ் எல்லாமே இவர்கள்தான் பார்த்தார்கள். மற்றபடி நான் செய்தது தப்புதான் நான். அடுத்து தனியாகவே அழைத்துச் செல்வதாக நீயா நானா ஷோவில் சொன்னேன். ஆனால் அதெல்லாம் எடிட்டிங்கில் போய்விட்டது. அதனால் நான் வில்லனாகிவிட்டேன்” என்று கலகலப்பாக பேசி சரண்டர் ஆகி விட்டார்.

NEEYA NAANA, GOPINATH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்