'தமிழில்' ஊர்ப்பெயர்கள்... ஊர் பெயர்கள் மாற்றம் குறித்த 'அரசாணை' வாபஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழில் ஊர்ப்பெயர்கள் மாற்றம் குறித்த அரசாணையை வாபஸ் பெறுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  தெரிவித்து இருக்கிறார்.

சமீபத்தில் தமிழ்நாட்டிலுள்ள சுமார் 1018 ஊர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து பயன்படுத்தப்படும் என தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அறிவித்து இருந்தது. இதற்கு தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. சமூக வலைதளங்கள் வழியாக பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊர்ப்பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்பப் பெறப்படுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார். மேலும், இதுதொடர்பாக துறைசார் வல்லுநர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு புதிய அரசாணை இரண்டு அல்லது 3 நாள்களில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்