‘கல்யாணம் பண்ணச் சொல்லி டார்ச்சர் செய்த காதலி’.. கொடூர முடிவெடுத்த ஜோதிடர்..! வெளியான பரபரப்பு வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியின் கழுத்தை அறுத்து ஜோதிடர் கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆண்டிவலசைப் பகுதியை சேர்ந்தவர் ஜோதிடர் கந்தசாமி (50). இவரது மகள் வெள்ளையம்மாள் (21). இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக 3 மாதத்தில் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இதனை அடுத்து தந்தை கந்தசாமியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஜோதிடர் முத்து (25) என்பவருடன் வெள்ளையம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி போனில் பேசியும், உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இதில் வெள்ளையம்மாளிடம் இருந்து முத்து அடிக்கடி பணம் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு முத்துவிடம் வெள்ளையம்மாள் கேட்டுள்ளார். பல்வேறு காரணங்களை கூறி முத்து காலம் கடத்தி வந்துள்ளார்.

ஆனால் வெள்ளையம்மாள் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து முத்துவை வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த 11ம் தேதி வெள்ளையம்மாளை போனில் தொடர்பு கொண்ட முத்து, திருச்சி அருகே உள்ள தொடையூருக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி வெள்ளையம்மாளும் அங்கே சென்றுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெள்ளையம்மாளின் கழுத்தை அறுத்துவிட்டு, ஆற்றங்கரையோரத்தில் குழி தோண்டி புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதனிடையே மகளை காணவில்லை என தந்தை கந்தசாமி போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் முத்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அங்கு அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், காதலி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

CRIME, MURDER, POLICE, NAMAKKAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்