சாப்பாட்டில் எலி மருந்து.. கணவரின் இறுதி சடங்கு முடிந்த பிறகு வெளியான உண்மை.. திடுக்கிட வைத்த மனைவி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாகப்பட்டினம் : கணவரின் இறுதி சடங்கு முடிந்து இரண்டு வாரத்திற்கு பிறகு, சில உண்மை தெரிய வந்த நிலையில், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

நாகப்பட்டினம் அருகே வேளாங்கண்ணியை அடுத்த வேட்டைக்காரனிருப்பு அருகே, சடையன் காடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திரன். ஒன்றிய குழு உறுப்பினரான இவரது மனைவியின் பெயர் சூர்யா.

இருவரும் ஒன்றாக வசித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தேவேந்திரனுக்கு மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் மோசமான உடல்நிலை

இதனால், அடிக்கடி மருத்துவமனை சென்று வந்துள்ளார் தேவேந்திரன். பிறகு, கடந்த டிசம்பர் மாதம், 15 ஆம் தேதியன்று, முற்றிலும் குணமடைந்த தேவேந்திரன், வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், உடல்நிலை தேறி வந்த தேவேந்திரனுக்கு, திடீரென உடல்நிலை மீண்டும் மோசமாக ஆரம்பித்துள்ளது.

சோகம்

இதன் காரணமாக, ஜனவரி மாத தொடக்கத்தில், மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் தேவேந்திரன். அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, திருச்சியிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவேந்திரன், கடந்த 6 ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்

தேவேந்திரனின் மறைவால், அவரது குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். நோய் வாய்ப்பட்டு, பின் அதிலிருந்து குணமடைந்து வந்த தேவேந்திரன் திடீரென உடல்நிலை மோசமாகி, உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மனைவி மீது சந்தேகம்

இந்நிலையில், தேவேந்திரன் உயிரிழந்து சுமார் 15 நாட்குளுக்கு மேல் ஆன நிலையில், அவரது மனைவி சூர்யா எந்த கவலையும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், செல்போனில் அடிக்கடி சிரித்து பேசுவதையும், தேவேந்திரனின் உறவினர் ஒருவர் கவனித்துள்ளார். இதன் காரணமாக, சூர்யா மீது அனைவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

தெரிய வந்த உண்மை

இதனைத் தொடர்ந்து, சூர்யாவின் செல்போனை உறவினர்கள் சிலர் சோதனை செய்து பார்த்த போது தான் அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிய வந்துள்ளது. தேவேந்திரினின் வீட்டில் கடந்த பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த சந்திரசேகரன் என்பவர், சூர்யாவுடன் அதிகம் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை வைத்து, சந்தேகத்தின் பெயரில், சந்திரசேகரனை தேவேந்திரனின் குடும்பத்தினர், போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

சாப்பாட்டில் எலி மருந்து

தொடர்ந்து, போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், சூர்யாவுக்கும், வேலைக்காரனான சந்திரசேகரனுக்கும் தவறான தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அது மட்டுமில்லாமல், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதியன்று, சூர்யா மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் இணைந்து,தேவேந்திரன் சாப்பிட்ட உணவில் எலி மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். இதன் காரணமாக தான், தேவேந்திரனுக்கு மீண்டும் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது.

இறுதியில், சந்திரசேகரன் மற்றும் சூர்யா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலைக்காரனுடன் ஏற்பட்ட தவறான உறவின் காரணமாக, கணவரையே கொலை செய்து விட்டு மனைவி நாடகமாடிய சம்பவம், அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ILLEGAL AFFAIR, NAGAPATTINAM, SERVANT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்