‘ஐயா ரஜினிகாந்த் அவர்கள்...!’.. கட்சி தொடங்கவில்லை என்ற முடிவுக்கு ‘சீமான்’ போட்ட ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரஜினிகாந்தின் ‘கட்சி தொடங்கவில்லை’ என்ற அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளார்.

டிசம்பர் 31ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில், இன்று ‘கட்சி தொடங்கவில்லை, அரசியலுக்கு வரமுடியவில்லை. என்னை மன்னியுங்கள்’ என்று உருக்கமுடன் அறிக்கை வெளியிட்டார். ரஜினிகாந்தின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், ‘இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன்’ என சீமான் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்