அதிகாரத்திமிர்... பாஜக-வை குத்திக்காட்டி திமுக-வை கடுமையாக சாடிய சீமான்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பாஜக-வை குத்திக்காட்டி திமுக-வை 'அதிகாரத்திமிர்' என கடுமையக சாடியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Advertising
>
Advertising

தருமபுரி மாவட்டம், அரூரில் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைகோரி நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக-வினர் கூட்டத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக சீமான் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், வட இந்தியாவில் பாஜக செய்யும் அதே வகையிலான வன்முறை செயல்களையே திமுக-வும் செய்வதாகவும் சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "திமுக-வின் கும்பல் அத்துமீறி உள்நுழைந்து, மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் கொலைவெறித்தாக்குதல் நடத்த முற்பட்டதும், அதனைக் காவல்துறையினர் கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்ததும் கடும் கண்டனத்திற்குரியது.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுக-வினரின் இப்போக்கு கோழைத்தனத்தின் உச்சம். வடமாநிலங்களில் பாஜக செய்யும் அதேவகையிலான வன்முறையையும், சனநாயகத்திற்கு எதிரானக் கொடுங்கோல் போக்கையும் ஏவிவிடும் திமுக-வினரின் செயல் இழிவானது. அதிகாரத்திமிரிலும், ஆட்சி தந்த மமதையாலும் காவல்துறையைக் கைவசம் வைத்துக்கொண்டு அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவி-னரின் செயல் வெட்கக்கேடானது.

நாம் தமிழர் கட்சியின் மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீது வன்முறை வெறியாட்டத்தை ஏவிவிட்ட திமுகவினரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SEEMAN, BJP, DMK, சிமான், பாஜக, திமுக

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்