புடிச்சா விட மாட்டாங்கடா, சீக்ரம் 'அத' எடுத்து போடு...! 'சிவனேன்னு போய்ட்ருந்த மனுசன புடிச்சு...' மிட்நைட் சரக்கு பார்ட்டியில் நடந்த வெறிச்செயல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் வழிப்போக்கரை கத்தியால் குத்திவிட்டு, பிடிக்க வந்த மக்களை நோக்கி வெடிகுண்டு வீசிய போதை வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ராதாகிருஷ்ணன் சாலை அருகே ஐந்து பேர் நள்ளிரவில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் திடீரென தகராறில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து சிலர் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எதிரே வந்த நபர் ஒருவரை வலுக்கட்டாயமாக நிறுத்தி கத்தியால் குத்தியுள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயன்றனர்.

அப்போது அவர்கள் பொது மக்களிடம் தப்பிக்க வெடிகுண்டை சாலையில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து கத்திக்குத்தால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து சென்ற போலீசார் உடனே இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கத்தியால் குத்தப்பட்ட நபர் பொழிச்சலூரை சேர்ந்த சதீஷ்குமார்(37) என்பது தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக சூர்யா(21) என்னும் வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

BOMB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்