அசீமை பிக்பாஸ்கிட்ட கோர்த்து விட்ட மைனா.. "டக்குன்னு திரும்பி, அசீம் சொன்ன விஷயத்த கேட்டு சிரிக்க ஆரம்பிச்ச ஹவுஸ்மேட்ஸ்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

Advertising
>
Advertising

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.

இதில் கடந்த வாரம் நடந்து முடிந்த ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க்கில் கூட நிறைய கலவரங்கள் வெடித்திருந்தது.

அசீம் மற்றும் அமுதவாணன் ஆகியோர் சண்டை போட்டுக் கொண்டது, பழங்குடி அணிக்குள்ளேயே உருவான சண்டை சச்சரவுகள், இரவில் பூ திருடியதாக அசீம் மீது எழுந்த குற்றச்சாட்டு என ஏராளமான விஷயங்கள் பெரிய அளவில் பேசு பொருளாகவும் மாறி இருந்தது. அதே போல, போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் விளையாடும் விதம் குறித்தும் நிறைய கருத்துக்கள் பரவலாக முன் வைக்கப்பட்டும் வருகிறது. இது தொடர்பாக, போட்டியாளர்கள் மத்தியில் நிறைய கருத்துக்களையும் கமல்ஹாசன் கூறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சியும் வெளியேறி இருந்தார். அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் அரங்கேறி வரும் டாஸ்க் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்து குறைவான சண்டைகளுடன் சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 

சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக உள்ளது. அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்து இருக்கிறது. எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் அது. கதிரவன், ரச்சிதா, ஜனனி, தனலட்சுமி, அசீம் உள்ளிட்ட பல போட்டியாளர்களின் நடனமும் நடிப்பும் அதிக கவனம் ஈர்த்திருந்தது.

அப்படி ஒரு சூழலில், அசீம், மைனா நந்தினி, மணிகண்டா உள்ளிட்ட போட்டியாளர்கள் மத்தியில் வேடிக்கையாக நடந்த சம்பவம் தொடர்பான செய்தி பார்வையாளர்கள் கவனத்தை பெற்று வருகிறது.

சோஃபாவில் அமர்ந்திருக்கு அசீம் தூங்கிக் கொண்டிருக்கிறார். இதனை மைனா நந்தினி, கதிரவன், ADK, மணிகண்டா உள்ளிட்ட போட்டியாளர்கள் கவனிக்கவும் செய்கின்றனர். உடனடியாக, தனது மைக்கை எடுத்து மெதுவாக பேசும் மைனா, அசீம் தூங்குவதை மெல்ல பிக்பாஸிடம் போட்டுக் கொடுக்கிறார். திரும்ப திரும்ப அவர் தூங்குவதை மைனா காட்டிக் கொடுத்து கொண்டே இருக்க, தூக்கத்தில் அசீம் தலையும் கீழே போவது தெரிகிறது. இதன் பின்னர் நடுவே அசீம் முழித்துக் கொள்ள, மைனா பேசாதது போல நிற்கிறார்.

தொடர்ந்து மீண்டும் அசீம் தூங்க தொடங்க, பகல் நேரத்தில் தூங்குவதால் நாய் சத்தம் கேட்க வேண்டும் என்றும் மைனா வலுயுறுத்திக் கொண்டே இருக்கிறார். "உனக்கு ஒரு லெக் பீஸ் இருக்கு. வேகமா வா" என்றும் குலைக்கும் நாயை செல்லமாக கூப்பிடுகிறார் மைனா நந்தினி. அடுத்த நிமிடத்திலேயே நாய் குரைக்கும் சத்தம் கேட்க, தூக்கத்தில் இருந்தும் அசீம் எழுந்து கொள்கிறார்.

உடனடியாக, மைனா நந்தினியும், "யாருடா அவன் தூங்குனது?" என கேட்கிறார். உடனே அசீமும், "பூனை சேகரு. கம்பி வெச்சு குத்தி கிண்டிடுவேன்" என மைனாவை பார்த்து சொல்கிறார். இதன் பின்னர், "நீ தான் தூங்குனியா?" என மைனாவும் அசீமை பார்த்து கேட்க, தான் தூங்கியதை யாரும் பார்க்கவில்லை என்பது போல, "முழிச்சிட்டு தானே இருக்கேன்" என அசீம் சொல்கிறார். இதனைக் கேட்டதும், மைனா நந்தினி, மணிகண்டா உள்ளிட்டோர் சிரிக்க தொடங்குகின்றனர்.

MYNA NANDHINI, AZEEM, BIGG BOSS 6 TAMIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்