வீட்டுக்குள்ள 'ஒரு விஷயம்' புதைஞ்சு இருக்கு.. 'அத' எடுத்தா உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீட்டுக்குள் இருக்கும் தங்க புதையலை எடுத்து தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்படுள்ளனர்.

Advertising
>
Advertising

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தளி அருகே திப்பென அக்ரஹாரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் சாந்தாம்மா. கடந்த சில மாதங்களாகவே சாந்தம்மா வீட்டில் பல பிரச்னைகள் ஒன்று போனால் மற்றொன்று என வந்து கொண்டிருந்துள்ளது.

பூஜை செய்தால் சரி ஆகி விடும்:

ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட சாந்தாம்மா தனக்கு தெரிந்தவர் மூலம் வீட்டில் பூஜை செய்தால் சரியாகி விடும் என நினைத்து ஒருவரை அணுகியுள்ளார். மேலும், சாந்தாம்மா வீட்டில் பூஜை செய்வதாகக் கூறி, திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 5 பேர் அங்கு சென்றுள்ளனர்.

தங்கசிலை உள்ளது:

இந்நிலையில் சாந்தாம்மா அவர்களின் வீட்டில் தங்கச்சிலை இருப்பதாகவும் அது வெளியே எடுக்க வேண்டும் என்பதற்காகவே கடவுள் பல பிரச்சனைகளை உங்களுக்கு கொடுத்துள்ளார் எனவும் இஷ்டத்திற்கு கதை அளந்து விட்டுள்ளனர் அந்த மர்ம நபர்கள்.

சும்மா இருந்த சாந்தாம்மாவும் தங்க சிலை கிடைக்கும் என்ற ஆசையில் வீட்டை தோண்ட ஒத்துகொண்டுள்ளார். மேலும் வீட்டை தோண்ட சுமார், 55 ஆயிரம் ரூபாய் ஆகும் என கூறி அந்த பணத்தை வாங்கியுள்ளனர்.

வீட்டின் நடுவே பள்ளம்:

பணத்தை வசூலித்த அந்தக் கும்பல், பூஜைகள் செய்து தோண்டத் தொடங்கியுள்ளது. பாதி தோண்டிய பின் மேலும் 20 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். இல்லையென்றால் அப்படியே விட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

அதோடு சாந்தாம்மா வீட்டுக்குள்ளிருந்து சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால், அக்கம்பக்கத்தினர் தளி காவல்துறையினரை வரவழைத்தனர். விசாரணையில் அவர்கள் மோசடி கும்பல் என்பது உறுதியானதால், 5 பேரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

MONEY, GOLD, HOUSE, KRISHNAGIRI, கிருஷ்ணகிரி, வீடு, பள்ளம், தங்கம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்