"அரசியல்னால தான் நடிப்பை நிறுத்துனேன்".. படம், சீரியல் நடிச்சதை நிறுத்திய காரணம் சொன்ன CM மு.க. ஸ்டாலின்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல் அமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் மு.க. ஸ்டாலின். திமுக கட்சியில் பல்வேறு பொறுப்பில் அங்கம் வகித்து சிறப்பாக செயல்பட்டு வந்த மு.க. ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆகவும் தேர்வாகி இருந்தார்.

Advertising
>
Advertising

தொடர்ந்து, மக்களுக்கான சிறப்பான ஆட்சியையும் அளித்து வரும் ஸ்டாலின், மக்கள் பிரச்சனைகளுக்காக நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்தும் தீர்வு கண்டு வருகிறார்.

இந்த நிலையில், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அரசியல் தவிர தனது பெர்ஷனல் பக்கங்கள் குறித்து நிறைய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தி இருந்தார். அது மட்டுமில்லாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு நிறைய விஷயங்களையும் மிக ஜாலியாகவும் குறிப்பிட்டிருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

காதல் ஏதாவது கடந்துருக்கீங்களா?..

அப்போது முக ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட கோபிநாத், "உங்கள் வீட்டில் நிறைய காதல் திருமணம் நடந்துள்ளது. நீங்க கல்லூரியில் படிக்கும் போது காதல் ஏதாவது கடந்து வந்து இருக்கீங்களா?" என்ற கேள்வியை முன் வைத்தார்.

இதற்கு பதில் அளித்த மு.க. ஸ்டாலின், "எனக்கு அந்த சிந்தனையே போகல. ஏன்னா நான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கும் போதே நாடகத் துறைக்கு போயிட்டேன். அதுக்கப்புறம் கல்லூரியில் வரும் போது சீரியல் நடிக்க ஆரம்பிச்சிட்டேன். ஒன்னு, ரெண்டு திரைப்படத்தில் எல்லாம் கூட கெஸ்ட் ரோல் நடிச்சேன். அது மாதிரி விஜயகாந்த் நடிச்சு தலைவர் பாடல் எழுதின ஒரு படத்திலயும் நடிச்சிருந்தேன்" என தெரிவித்தார்.

விஜயகாந்த் உடனான நட்பு

அப்போது நடிகர் விஜயகாந்த்துடன் தனிப்பட்ட நட்பு உறவு குறித்து பேசி இருந்த முக ஸ்டாலின், "என்னை அண்ணன் அண்ணன்ன்னு தான் கூப்பிடுவாரு. நான் வேளச்சேரி வீட்டில் இருந்தப்ப என்னை பலமுறை வந்து பார்த்திருக்கிறார். நானும் பலமுறை அவரை போய் பார்த்திருக்கேன். ரொம்ப க்ளோஸா இருப்பார்.


Images are subject to © copyright to their respective owners

தலைவர் தலைமையில தான் அவருக்கு கல்யாணம் நடந்துச்சு. அந்த கல்யாணத்துக்கு நானும் போயிருந்தேன். இப்போ உடம்பு சரி இல்லாம இருக்கிறப்போ கூட ரெண்டு, மூணு தடவ போய் பாத்துட்டு வந்தேன்" என தெரிவித்தார்.

நடிப்பை விட்ட காரணம்

அதே போல, திரைப்படங்கள், நாடகங்கள் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து நடித்த பிறகும் அதை ஏன் தொடரவில்லை என்ற கேள்வியை கோபிநாத் முன் வைக்க, இதற்கு பதில் சொன்ன முதல்வர் MK ஸ்டாலின், "அதற்கும் அரசியல் தான் காரணம். அரசியலுக்கு டைம் இருந்தது. அரசியலையும், இதையும் நிச்சயமா ஒன்னா பண்ண முடியாது என நடிப்பை நான் ஒதுக்கிட்டேன்.


முன்னாடி பொதிகைல குறிஞ்சி மலர்ன்னு ஒரு சீரியல் நடிச்சேன். அந்த சேனல்ல ஒளிபரப்பான முதல் சீரியல் நான் நடிச்ச குறிஞ்சி மலர் தான்" என தெரிவித்தார்.

MKSTALIN, GOBINATH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்