CM ஆனதுக்கு அப்புறம் பார்த்த முதல் படம்.. மிசா -ல இருக்குறப்போ நானும் அந்த கொடுமையை அனுபவிச்சுருக்கேன்.. MK ஸ்டாலின் ஷேரிங்ஸ்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல் அமைச்சராக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருபவர் மு.க. ஸ்டாலின். இவர் மார்ச் 1 ஆம் தேதியான இன்று தனது 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | 4 நாள் முழுக்க தூங்கிய பெண்.. "பகல்ல கண் தொறக்குறதே Rare".. வினோத நிலையால் அவதிப்படும் பெண்!!

மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உலகெங்கிலுமுள்ள தமிழக மக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை உலகினர், தொழில் துறையினர் என பலரும் தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அதே போல, தனது பிறந்த நாள் விழாவையும் குடும்பத்தினருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டாடி இருந்தார். திமுக கட்சியில் பல்வேறு பொறுப்பில் அங்கம் வகித்து தமிழக மக்களுக்காக உழைத்து வந்த முக ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சராக பதவியேற்று இருந்தார். தொடர்ந்து, சுமார் இரண்டு ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகளை நேரடியாக களத்தில் இறங்கி தீர்வு செய்வதில் முதல்வர் முக ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், நமது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். இதனை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். அரசியல் தவிர தனது பெர்ஷனல் பக்கங்கள் குறித்து நிறைய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தி இருந்தார். தனது பள்ளிக்காலம் குறித்தும், திருமணம் குறித்தும் நிறைய கருத்துக்களையும் அவர் சுவாரஸ்யத்துடன் பகிர்ந்திருந்தார்.

மேலும் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆன பிறகு தான் பார்த்த முதல் திரைப்படம் குறித்து பேசி இருந்த முதல்வர் MK ஸ்டாலின், "சூர்யா நடிச்ச ஜெய்பீம் படம் தான் நான் முதலில் பார்த்தேன். அதை பார்த்ததுக்கு அப்பறம் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டேன். ஏன்னா ஒரு கைதியை வந்து எந்த அளவுக்கு அவன் மேல பொய் வழக்கு போட்டு, அவனை ஜெயில்ல அடைச்சு, போலீஸ் வந்து அவன் மேல காட்டுத்தனமாக நடந்தது, பழிவாங்கியது, கொடுமைப்படுத்தின காட்சிகள் எல்லாம் பார்த்து ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன்.

Images are subject to © copyright to their respective owners.

அதுக்கு காரணம் என்னன்னா நான் மிசால இருந்தப்போ நானும் அந்த கொடுமையை அனுபவிச்சேன். அது எனக்கு நினைவுக்கு வந்துச்சு. படம் முடிந்ததும் நான் சூர்யாவை மனம் திறந்து பாராட்டுனேன். சந்துருவோட கதையை தான் சூர்யா பண்ணியிருக்கிறார். நான் அவரையும் பாராட்டினேன். இயக்குநரையும் நான் மனம் திறந்து பாராட்டினேன். அது தான் நான் முதலமைச்சரான பிறகு பார்த்த முதல் படம்" என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

Also Read | கேக் வெட்டுறப்போ நடந்த சுவாரஸ்யம்.. திடீர்ன்னு எழுந்த சிரிப்பலை.. திரும்பி முதல்வர் MK ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்!!

MKSTALIN, CM MK STALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்