டிரைவருக்கு கொரோனா: பாதி வழியில் 'இறங்கி'... வேறு காரில் 'பயணம்' செய்த அமைச்சர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டிரைவருக்கு கொரோனா உறுதியானதால் சென்று கொண்டிருந்த காரில் இருந்து அமைச்சர் பாதி வழியில் இறங்கினார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் கார் டிரைவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சென்றுள்ளார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பிய போது அவரது காரை ஓட்டிய டிரைவருக்கு கொரோனா உறுதியானதாக போனில் தகவல் வந்தது.

இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறிவிட்டு அமைச்சர் பாதி வழியிலேயே இறங்கி வேறு காரில் சென்றார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்