‘அர்ச்சகர் மகளை மணந்த எம்.எல்.ஏ!’. தந்தையின் ஆட்கொணர்வு மனுவை விசாரித்த பின்.. சென்னை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த 5 ஆம் தேதி கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தியாகதுருகம் பகுதியை சேர்ந்த அர்ச்சகர் மகளும் கல்லூரி மாணவியுமான சௌந்தர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

பெண்ணின் தந்தை சாமிநாதனோ, 19 வயது கூட நிரம்பாத தனது மகளை எம்.எல்.ஏ பிரபு கடத்தி திருமணம் செய்துகொண்டதாகவும், அதனால் அவரிடமிருந்து தன் மகளை மீட்டுத்தரக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாளை மதியம் எம்எல்ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதேபோல், இதனை தொடர்ந்து சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதனையும் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.  நீதிபதிகளின் உத்தரவின் படி, தன் மனைவியை கோர்ட்டில் ஆஜர்படுத்துவுள்ளதாகவும் பிரபு தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்