‘அந்த கண்ணாடிய பார்த்தப்போவே எங்களுக்கு டவுட்...’ ‘கண்ணாடியில லைட்டா கை வச்ச உடனே அதுவா ஓப்பன் ஆச்சு...’ ‘உள்ள போய் பார்த்தா...’ - அதிர்ந்து போன போலீசார்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஏராளமான தனியார் லாட்ஜ்கள் இயங்கி வருகின்றன. ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் லாட்ஜ்களும், ஹோட்டல்களும் ஆளில்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்நிலையில், அங்கிருக்கும் ஒரு லாட்ஜில் மட்டும் அவ்வப்போது ஆட்கள் வந்து செல்வது குறித்தும், பாலியல் தொழில் நடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது, உடனே அவர்கள் சோதனையில்  ஈடுபட்டனர்.

அப்போது லாட்ஜின் முன் பக்கம் பூட்டப்பட்டு காணப்பட்டது, போலீசார் உடனே பின் கதவு வழியாக நுழைந்துள்ளனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, அங்கே ஏராளமான ஆண்களும், பெண்களும் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். அப்போது ஒவ்வொரு ரூமிற்கும் சென்று சோதனை  செய்தனர். லாட்ஜ் அறையில் இருந்த கண்ணாடி சாதாரண கண்ணாடி போல் இல்லாமல் அளவில் பெரியதாக இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணாடியின் மீது கையை வைத்து அழுத்திய போது, திடீரென அது தானியங்கி கதவு போல திறந்துள்ளது. உள்ளே நுழைந்து பார்த்த போது ரகசிய அறை காணப்பட்டுள்ளது. இந்த அறைக்குள் பாலியல் தொழில் நடத்தி வந்ததுபோலீசார் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  லாட்ஜ் காப்பாளர், ஊழியர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்