"மாத்தி மாத்தி பேசுறாங்க"!.. போலீசாரையே சுத்தலில் விட்ட மீரா மிதுன்!.. புதிய யுக்தியை கையிலெடுத்த சைபர் கிரைம் காவல்துறை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மாற்றி, மாற்றி பேசுவதாக கூறியுள்ள சைபர் கிரைம் போலீசார், அவரிடம் வேறு மாதிரியான விசாரணையை தொடங்க முடிவு செய்துள்ளனர்.

பட்டியலின சமூகத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் மீரா மிதுனிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு, அவர் முழு ஒத்துழைப்பு அளிக்காமல் மாற்றி மாற்றி பேசியதாகவும், போலீசாரைக் கண்டதும் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மீரா மிதுனை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, மன நல ஆலோசகர் முன்னிலையில் விசாரித்து வாக்குமூலம் பெற முடிவு செய்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்