‘40 வயசாச்சு, எனக்கு கல்யாணமே நடக்காதா?’.. சோகத்தில் விபரீத முடிவெடுத்த எலக்ட்ரீசியன்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மயிலாடுதுறை அருகே திருமணம் ஆகாத விரக்தியில் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே உள்ள வானாதிராஜபுரம் பெருமாள்கோயில் தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதன் (75). இவரது மகன் (40). எலக்ட்ரீசியனான இவர் மது பழக்கத்துக்கு அடிமையானர் எனக் கூறப்படுகிறது. தினமும் சம்பாதிக்கும் பணத்தை குடித்துவிட்டு வருவதை சேதுராமன் வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்திவிடுவார் என திருமண ஏற்பாடுகளை வைத்தியநாதன் செய்துள்ளார்.

ஆனால் சேதுராமன் குடி பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதை தெரிந்துகொண்டு, யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சேதுராமன், 40 வயதான எனக்கு திருமணமே நடக்காதா, நான் மட்டுமா குடிக்கிறேன்,ஊரே குடிக்கிறது என புலம்பியபடியே இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10ம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு பெருமாள் கோயில் வாசலில் மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சேதுராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகாத விரக்தியில் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SUICIDEATTEMPT, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்