'மனைவி, மகளை கிண்டல் செய்ததை'... 'தட்டிக் கேட்டதால் நேர்ந்த கோரம்'... 'இளைஞர்களின் வெறிச் செயல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மகள் மற்றும் மனைவியை கிண்டல் செய்த இளைஞரை, தட்டிக்கேட்டதால் கூலித் தொழிலாளியை ஓட ஓட விரட்டி, வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மதிச்சியம் ஆர்.ஆர்.மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 35 வயதான இவர், சுமைதூக்கும் தொழிலாளி. இவருக்கு, ஹேமலதா என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு, மணிகண்டன் கடையில் சாப்பாடு வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்து தகராறு செய்த 3 பேர், பின்னர் தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால், மணிகண்டனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனர். இதில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அவரை செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்த உமாமகேசுவரன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வைகை ஆறு பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், ‘கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணிகண்டனின் மனைவியும், மகளும் வைகை ஆற்றுக்குள் சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றனர்.

அப்போது அங்கு நின்றிருந்த உமாமகேசுவரன், அவர்களை கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. எனவே மனைவி-மகளை கேலி செய்த உமாமகேசுவரனை மணிகண்டன் தட்டி கேட்டார். மேலும் ஆத்திரமடைந்த அவர், உமா மகேசுவரனை சரமாரியாக தாக்கினார். அன்றைய தினத்தில் இருந்து இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் தான் ஆத்திரத்தில் மணிகண்டனை கொலை செய்ததாக’ இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

MURDER, MADURAI, WARNING, HARASSMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்