அப்பா-மகன் தரையில் 'புரண்டதால்' காயம்... அதிரவைத்த எஃப்.ஐ.ஆர் அறிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடையை அடைப்பது தொடர்பான விவகாரத்தில் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த காமராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்த அப்பா-மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இருவரின் மரணத்துக்கு நீதி கேட்டு சாத்தான்குளம் பகுதியில் பொதுமக்கள், வணிகர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இரண்டு எஸ்.ஐ-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர். இது மட்டுமின்றி சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த அனைவரும் கூண்டோடு பணிமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் அப்பா-மகன் கைது தொடர்பாக போலீசார் பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், ''கடையை அடைக்கச் சொன்னோம். அதற்கு எங்களையே அவதூறாகப் பேசி அப்பாவும் மகனும் தரையில் புரண்டார்கள். அதில், அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது,'' என பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் #சாத்தான்குளம் என்னும் ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Video: யாருகிட்ட என்ன பேசுற?... வங்கியில் புகுந்து 'பெண்' ஊழியரை சரமாரியாக 'தாக்கிய' கான்ஸ்டபிள்... வைரலாகும் வீடியோ!
- 'சிறையில் தந்தை மகன் உயிரிழந்த வழக்கு...' 'உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து விசாரணை...' விரிவான தகவல்கள்...!
- "உயிரிழப்பை தடுக்கதான் ஊரடங்கு!".. 'கொந்தளித்து' போலீஸை 'விளாசும்' கமல்!
- 'தமிழகம்' முழுவதும் நாளை கடையடைப்பு... தூத்துக்குடியில் தந்தை-மகன் 'உயிரிழந்த' விவகாரத்தில்... வணிகர் சங்கம் கோரிக்கை!
- 9 மணி நேர விசாரணை... போலீசாரிடம் 'உண்மைகளை' ஒப்புக்கொண்ட நடிகை... கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு!
- சென்னை பெண் டாக்டர் கிஃப்ட் கொடுத்த ‘காஸ்ட்லி வாட்ச்’.. ‘மெமரி கார்டுகள்’.. காசி வீட்டில் சிக்கிய ‘முக்கிய’ ஆவணங்கள்..!
- "அந்த வாட்ஸ் ஆப் சாட்டிங்லாம் வெளில விட்ரட்டுமா?".. 'கல்லூரி' பெண்களை மிரட்டி 'பெண் உட்பட 3 பேர் கொண்ட கும்பல்' செய்த பரபரப்பு காரியம்!
- ஆன்லைன் கிளாஸ், ஆபாசப்படம்... 3 சிறுவர்களால் 'கோவை' சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... 'அதிர்ந்து' போன மருத்துவர்கள்!
- சீன மொழியில்... 'மாமல்லபுரம்' அருகே கரை ஒதுங்கிய மர்ம டிரம்... திறந்து பார்த்து 'அதிர்ந்து' போன போலீஸ்!
- காலேஜ் லீவுல 'ஜாலியா' இருக்கணும்! நண்பனின் 'கண்ணெதிரே' பறிபோன நால்வரின் உயிர்... கதறித்துடித்த பெற்றோர்கள்!