‘தகாத உறவு’!.. ‘மகனின் மாஸ்டர் ப்ளான்’.. சினிமா பாணியில் ‘மிளகாய் பொடி’ தூவி கொலை.. வெளியான பகீர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி அருகே சினிமா பாணியில் மிளகாய் பொடி தூவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள சகாயம் நகரைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பிய அலெக்சாண்டர், அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி மிள்காய் பொடி தூவி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகள் யாரென தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அலெக்சாண்டரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் அப்பகுதியில் உள்ள பெண் ஒருவரிடம் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அப்பெண்ணின் மகளிடம் அவர் அடிக்கடி போனில் பேசியது விசாரணையில் வெளிவந்துள்ளது. ஆனால் தாய், மகள் இருவரும் மாயமாகியுள்ளனர். அதனால் அப்பெண்ணின் மகன் ஜவகர் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து திரும்பிய அலெக்சாண்டர் அப்பெண்ணுக்கு சில உதவிகளை செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பெண்ணின் மகளிடம் அலெக்சாண்டர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் மகன் ஜவகருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து அலெக்சாண்டரை கொலை செய்ய ஜவகர் முடிவு செய்துள்ளார்.

அதன்படி கடந்த மாதம் 25ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற அலெக்சாண்டரின் மீது மற்றொரு இருசக்கர வாகனத்தை மோதவிட்டுள்ளனர். பின்னர் சினிமா பாணியில் அலெக்சாண்டரின் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு சரமாரியாக கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அருகில் உள்ள கால்வாயில் குளித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அலெக்சாண்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே தாய் மற்றும் சகோதரியை வெளியூருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள ஜவகரின் தாய், சகோதரி மற்றும் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

CRIME, MURDER, AFFAIR, KANYAKUMARI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்