‘தம்பியை காப்பாற்றபோய்’... ‘அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்’... ‘வருந்திய அஸ்வின்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி மயக்கமான தம்பியைக் காப்பாற்றப்போய், அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் கீழ்தளத்தில் கழிவுநீர்த் தொட்டி உள்ளது. இதனை சுத்தம் செய்ய அதிகாலை 4 மணியளவில், ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர், தனது பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் 5 பேரை அழைத்து வந்துள்ளார். சுத்தம் செய்ய வந்தவர்களில் ரஞ்சித்குமார் மற்றும் அருண்குமார் இருவரும் சகோதரர்கள் ஆவர். இந்நிலையில் வணிக வளாகத்தில் உள்ள கழிவுநீர்த் தொட்டியில், ரஞ்சித் குமார் உள்ளிட்ட இருவர் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென விஷவாயு தாக்கியதில் ரஞ்சித்குமார் மயக்கம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மற்றவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து மேலே நின்றிருந்த அண்ணன் அருண்குமார், கீழே இருந்த ஒருவரை கைகொடுத்து மேலே தூக்கியநிலையில், மயக்கமாக இருந்த தம்பியை காப்பாற்றுவதற்கு கழிவுநீர்த் தொட்டியில் இறங்கியுள்ளார். பின்னர் அவரை மேலே தூக்கி விட்டுள்ளார். அதன்பின்னர், அவர் வெளியேவர முயற்சித்தபோது, அந்த நேரத்தில் விஷவாயு தாக்கியதால் அருண்குமார் உள்ளே விழுந்துள்ளார்.

இதையடுத்து பதற்றமான அங்கிருந்த தொழிலாளர்கள், பின்னர் அருண்குமாரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவ்ம் அவர்களது குடும்பத்தில் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின், தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ASHWIN, TWEET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்