‘அண்ணன் கண்முன்னே நடந்த பயங்கரம்’.. தம்பி செய்த காரியத்தால்.. ‘கூட்டத்தில் இருந்தவர் கதறியழுத பரிதாபம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றில் குதித்து துணி வியாபாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சிந்தாதிரிப்பேட்டை பாலகிருஷ்ண தெருவில் வசித்து வந்த பிரபாகரன் என்பவர் துணி வியாபாரம் செய்துவந்துள்ளார். இன்று காலை அருணாச்சலம் சாலை அருகே உள்ள கூவம் ஆற்றிற்கு வந்த அவர் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் ஆற்றில் குதித்துள்ளார். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டுள்ளனர்.

அப்போது கூட்டத்திலிருந்து அவர்களுக்கு உதவிய நபர் ஒருவர் திடீரென கதறி அழத் தொடங்கியுள்ளார். பின்னர் அவரிடம் விசாரித்ததில் தற்கொலைக்கு முயற்சித்தவர் அவருடைய தம்பி என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட பிரபாகரன் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

பிரபாகரன் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது ஏதேனும் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் கண்முன்னே தம்பி தற்கொலை செய்துகொண்டதும், அதைப்பார்த்து அண்ணன் கதறி அழுததும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CHENNAI, BROTHER, SUICIDE, COOUM, RIVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்