'நாயா வளக்குற நாய்? அடக்கி வெக்க வேணாம்'.. எதிர் வீட்டுக்காரர் மூக்கை உடைத்த ஆசாமி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் வசித்துவரும் 32 வயதான முருகராஜன் என்பவர் தன் வீட்டில் 2 நாய்களை வளர்த்து வந்துள்ளார்.

இவரது குடியிருப்பின் முதல் மாடியில் வசித்துவரும் கிருஷ்ணன் என்பவரை, முருகராஜனின் வீட்டு நாய்கள் பார்த்து குறைத்துள்ளன. இதனால் டென்ஷனான கிருஷ்ணனுக்கும் முருகராஜனுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு ஒரு கட்டத்தில் முற்றிப்போனது. அதே குடியிருப்பில் நாய் வளர்க்கும் சிலர் இவ்விஷயத்தில் முருகராஜனுக்கு ஆதரவாக நின்று, கிருஷ்ணனை எதிர்த்து பேசியுள்ளனர்.

ஆனாலும் நடுநிலையாளர்கள் சிலர் இருவரையும் சமாதானப்படுத்திவிட்டு, அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். அதன் பின்னர் வாயில்லா ஜீவன்களால் உங்களுக்கு என்ன தொந்தரவு என்று முருகராஜன், கிருஷ்ணனை பார்த்து கேட்டுள்ளார். ஆனால் கிருஷ்ணனோ ‘இனி இந்த நாய்கள் என்னை பார்த்து குரைத்தால் அவ்வளவுதான்’ என்று எச்சரித்துள்ளார்.  அப்படி செய்தால் போலீஸில் பிடித்துக் கொடுப்போம் என நாய் வளர்ப்பவர்கள் சிலர் கிருஷ்ணனை பார்த்து கூறியுள்ளனர்.

பின்னர் அவர்களும் கலைந்து சென்ற பிறகு ஆத்திரத்தில் கிருஷ்ணன், முருகராஜனிடம் ‘இவ்ளோ சொல்றேன்.. நாயை அடக்கி வைன்னு.. சொன்னா கேக்க மாட்ட?’ என்று சொல்லி, அவரது மூக்கை உடைத்துள்ளார். அதன் பின்னர் போலீஸ் கேஸாகிவிட்டது. நாய் வளர்ப்பவர்கள், நாயை வீட்டில் வைத்து வளர்க்காமல் அடுத்தவர்களுக்கு தொந்தரவாக வளர்க்கின்றனர், அதுதான் பிரச்சனை என்று கிருஷ்ணன் போலீஸிடம் கூறியுள்ளார். அசிங்கமாக திட்டுதல், கையால் அடித்தல், கொலை மிரட்டல் என 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குறிப்பு: சம்மந்தப்பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

DOG, CHENNAI, DOGLIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்