'வரும் சட்டமன்ற தேர்தலில்... ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா?'.. 'ரஜினி அரசியலுக்கு வந்தால்'?.. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பளீச் பதில்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை கமல்ஹாசன் பொதுச்செயலாளராக நியமித்தார்.

இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

"அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்பேனா?

ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும், "2021 தேர்தலில் ரஜினி அரசியலுக்கு வந்தால் போட்டி போடுவேன்" என்றும் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்