‘காதல் கல்யாணம்’!.. உதவி செஞ்ச இளைஞருக்கு நடந்த கொடூரம்.. மதுரை அருகே அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் காதல் திருமணத்துக்கு உதவி செய்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

மதுரை பி.பி குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன (28). இவரது உறவினரான சரத்குமார், திருமங்கலத்தை சேர்ந்த விஜயன் என்பவரது மகளை காதல் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்துக்கு மணிகண்டன் உதவியதால் மணிகண்டனுக்கும், விஜயனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜூன் 7ம் தேதி திருமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது நண்பர்களான சபரிநாதன், விக்னேஷ்வரன், மனோ பாலசந்தர் ஆகியோருடன் புளியங்குளத்தில் உள்ள தோட்டத்தில் மது அருந்தியுள்ளனர். அதில் மண்கண்டன் மட்டும் மதுபோதையில் அங்கேயே தூங்கியுள்ளார்.

இதையறிந்த திருமங்கலத்தை சேர்ந்த சக்திவேல், பிரகாஷ் ஆகியோர் தூக்கத்தில் இருந்த மணிகண்டனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசார் நடந்திய விசாரணையில், காதல் திருமணத்துக்கு உதவியதால் விஜயனின் தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்