'பையன் பாத்துடான், இனிமேல் சும்மா இருக்க கூடாது'... 'பெற்ற தாயே செய்த பாதகம்'... நடுங்க வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தன்னுடைய தகாத உறவை பார்த்து விட்டதற்காக, பெற்ற மகனை தாயே கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது வி.குச்சம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் ராம்குமார். இவருக்கு ஆனந்தஜோதி என்ற பெண்ணுடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஜீவா என்ற மகனும் லாவண்யா என்ற மகளும் உள்ளனர். ராம்குமார் கொத்தனார் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், ஆனந்தஜோதி விருதுநகரில் உள்ள கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இதனிடையே சம்பவத்தன்று ஜீவா பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து படுத்து தூங்கியுள்ளான். பின்னர் மாலையில் தூங்கிய ஜீவாவை ஆனந்தஜோதி எழுப்பியுள்ளார். அப்போது ஜீவா பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளான். இதையடுத்து உறவினர்களின் உதவியோடு, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிறுவன் ஜீவாவை கொண்டு சென்றுள்ளார்கள். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஜீவா இறந்து பலமணி நேரம் ஆகியுள்ளது என்றும் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கிய தடயமும், நகக் கீறல் உள்ளதாக தெரிவித்தார். இதனைக்கேட்டு அதிர்ந்து போன ராம்குமார் மருத்துவமனையில் கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து மனைவி ஆனந்தஜோதியிடம் மகனுக்கு என்ன நடந்தது என கேட்டபோது, அதற்கு ஆனந்தஜோதி, ஜீவா தன்னுடன் மதிய வேளையில் படுத்து தூங்கினான், பின்னர் தான் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது ஜீவா அசைவில்லாமல் இருந்தான் என்று கூறியுள்ளார். மனைவின் பதிலில் சந்தேகம் அடைந்த ராம்குமார், மகனின் சாவு குறித்தும், மனைவி ஆனந்தஜோதி மீது சந்தேகம் உள்ளதாகவும் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கவனத்திற்கு சென்றதையடுத்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் தனிபடையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதில், ''ஆனந்தஜோதிக்கும், ராம்குமார் உறவுக்காரர் மருதுபாண்டி என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் கணவன் இல்லாத நேரத்தில் தனிமையில் சந்தித்து வந்துள்ளார்கள். அதேபோன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் சந்தித்து கொண்டதை மகன் ஜீவா பார்த்துள்ளான்.

இதனால் அதிர்ந்துபோன இருவரும், மகன் ஜீவா நிச்சயம் ராம்குமாரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கூறிவிடுவான் என பயத்தில் இருந்துள்ளார்கள். இதனால் ஆனந்தஜோதியும், மருதுபாண்டியும், சேர்ந்து தூங்கி கொண்டு இருந்த ஜீவாவின் வாயை பொத்தி, கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்ததாக'' விசாரணையில் தெரியவந்தது. ஆனந்தஜோதியின் வாக்குமூலத்தை கேட்டு காவல்துறையினர் ஒரு நிமிடம் ஆடியே போனார்கள்.

இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தஜோதி,மருதுபாண்டி ஆகிய 2 பேரையும் வி.சத்திரப்பட்டி போலீசார் கைது செய்தனர். தன்னுடைய தகாத உறவுக்காக பெற்ற மகனையே தாய் கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் கடும் ஆத்திரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

MADURAI, MURDER, MOTHER, SON, ILLICIT RELATIONSHIP, YOUNG MOTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்