'நைஸா வீட்டுக்குள்ள புகுந்து...' 'லைட்டா ஜன்னலை ஓப்பன் பண்ணி...' 'அரை நிர்வாண மனிதன் செய்யும் அதிர்ச்சி காரியம்...' 'அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்...' - அச்சத்தில் உறைந்த மக்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை மாவட்டத்தில் நேரம் இருட்டிய பிறகு அரை நிர்வாணத்துடன் ஜன்னல்களை எட்டிப்பார்க்கும் மனிதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை நகரை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில், அரை நிர்வாணத்துடன் நடமாடும் மர்ம மனிதன் ஒருவர் இரவில் வீட்டு ஜன்னல்களை திறந்து எட்டிப்பார்த்து விட்டு தப்பியோடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதி குடியிருப்புகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் கண்ட காட்சிகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சியில், மர்ம மனிதன் ஒருவர் அரை நிர்வாணத்துடன் ஒவ்வொரு வீடாக நடந்து சென்று நைசாக ஜன்னல்களை திறந்து எட்டிப்பார்ப்பதோடு மட்டுமல்லாமல், வீட்டு கொடிகளில் காயும் பெண்களின் சேலைகள், சுடிதார் உள்ளிட்ட ஆடைகளை திருடிச்செல்வதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து புதூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்