'மைனர் பெண்ணின்' திருமணத்தை தடுத்து நிறுத்திய 'புதுமாப்பிள்ளைக்கு' நேர்ந்த 'நடுங்கவைக்கும்' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை அருகே மைனர் பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்தும் விதமாக போலீசாருக்கு தகவல் கொடுத்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சிந்தாமணி சாலையில் உள்ள கண்ணன் காலனியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது. இவரது பெற்றோர்  அருகில் உள்ள ராஜாம்மன் நகரில் வசித்து வருகின்றனர். இதனிடையே ராமமூர்த்தியின் பக்கத்து வீட்டிலுள்ள மைனர் பெண்ணுக்கும் விஜயகுமார் என்கிற இளைஞருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணம் குறித்து, ராமமூர்த்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனால் அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ராமமூர்த்தி மீது விஜயகுமாரும், விஜயகுமாரின் உறவினர்களும் ராமமூர்த்தியின் மீது பகையுடன் இருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில்தான் நேற்று ராமமூர்த்தி அவரது பெற்றோரை பார்க்க ராஜாம்மன் நகரில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் ராமமூர்த்தியின் தந்தை நல்லுசாமி தனது இருசக்கர வாகனத்தில் ராமமூர்த்தியை அவரது வீட்டிற்கு திரும்ப சென்று விடடுவதற்காக அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்.

அந்த சமயம் பார்த்து விஜயகுமாரும் அவரது உறவினர்களும் நல்லுசாமியின் வாகனத்தை வழிமறித்து ராமமூர்த்தியை வெட்ட முயற்சித்தனர். எனினும் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்ற ராமமூர்த்தி, கடைசியில் அந்த கும்பலின் கத்திக்கு இரையானார். இதனிடையே தந்தை நல்லுசாமி, ராமமூர்த்தியை காப்பாற்ற முயற்சி செய்தும் பலனின்றி படுகாயமடைந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்