இனிமேல் என் மனைவிய பார்த்துட்டே இருக்கலாம்ல...! 'பிரிவின் துயரம்...' - நெகிழ வைத்த காதல் கணவர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இறந்த தன் மனைவியின் நினைவாக, அவரை உயிர்ப்புள்ள சிலையாக அமைத்துள்ளார் மதுரையை சேர்ந்த தொழிலதிபர்.

மதுரை மாவட்டம் மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் சேதுராமன். இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி காலமானார். தனது காதல் மனைவி தன்னை தவிப்பில் ஆழ்த்தி சென்றாலும் என்றும் தன்னுடனே கூட பிரியாமல், பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று, மனைவி மீதுள்ள காதலினால் சேதுராமன் தனது மனைவியின் உருவச் சிலையை வடிவமைக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

எனவே, தனது வீட்டில் மதுரை மாவட்டம் வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பியான பிரசன்னா மற்றும் ஓவியர் மதுரை மருது ஆகியோர் மூலமாக பைபர் மெட்ரியலை கொண்டு  நவீன தொழில்நுட்பத்துடன் என்றும் நிரந்தரமாக இருக்கும் வகையில், தனது மனைவியை உயிர்ப்புள்ள சிலையாக வடிவமைத்துள்ளார்.

பிச்சைமணி அம்மாள் காலமாகி 30-ம் நாளை ஒட்டி தத்ரூபமாக செதுக்கப்பட்டு உருவாகிய மனைவியின் சிலையை வழிபட்டு உருகினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்