மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் காலமானார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சுவாசக் கோளாறு இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்த பின்னடைவை சந்தித்து வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இன்று (13.08.2021) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்