சேதமடைந்த 'ஊராட்சி ஒன்றிய பள்ளி' ... வழக்கு தொடுத்த ஆறு வயது 'சிறுமி' .. 'உயர்நீதிமன்றம்' அதிரடி தீர்ப்பு !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவள்ளூர் மாவட்டத்தில் சேதமடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியை ஓராண்டுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்று சேதமடைந்தது காணப்பட்டது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஆறு வயது மாணவி அதிகை முத்தரசி மற்றும் அவரது தந்தை தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியை அடுத்த ஓராண்டுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்றும், மேலும் அப்பள்ளி மைதானத்தில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

MINJUR, TIRUVALLUR, HIGH COURT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்