'ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஜெயிக்கணும்'... 'ஒன்றிணைந்து ஆட்சி அமைப்போம்'... சசிகலா அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.நகரில் உள்ள இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகளை சசிகலா வழங்கினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை பெற்றார். அதன்பின்னர் தமிழகம் வந்த சசிகலா எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களிடையே பேசிய சசிகலா, ''நான் கொரோனாவில் இருந்தபோது கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் எல்லோருடைய வேண்டுதலாலும் நலம் பெற்று தமிழகம் வந்தேன்.

ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டுச் சென்றார். அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன். விரைவில் தொண்டர்கள், பொதுமக்களைச் சந்திப்பேன்” எனத் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்