மனைவியின் அக்காவையும் கல்யாணம் செஞ்ச கணவன்.. சந்தேகத்தால் குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்..3 நாளுக்கு அப்பறம் வெளியேவந்த உண்மை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கரூரில் தனது இரண்டாவது மனைவியை கணவனே கொலை செய்தது அந்தப் பகுதி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | உள்ளே நுழைஞ்சவங்க தப்பிக்கிறது ரொம்ப கஷ்டம்.. "இதுக்கெல்லாம் காரணம் அந்த பொம்பள தான்"..1000 வருஷமா ஊர் மக்களை துரத்தும் சாபம்..!

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த பள்ளசங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். 34 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இப்பெண்ணுடைய அக்கா-வின் (30) கணவர் 7 வருடங்களுக்கு முன்னர் நேர்ந்த விபத்தில் இறந்துபோனதால் தனது மனைவியின் சம்மதத்தோடு அவருடைய மூத்த சகோதரியை இரண்டாவது முறையாக திருமணம் செய்திருக்கிறார் தனபால்.

சகோதரிகள் இருவருக்கும் ஒவ்வொரு குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த 29 ஆம் தேதி வெளியே சென்ற தனபாலின் இரண்டாவது மனைவி வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த அவருடைய முதல் மனைவி, இதுபற்றி கணவரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார் தனபால். இருப்பினும், தனது அம்மா வீட்டில் அப்பெண்மணி விசாரித்திருக்கிறார். அவர் அங்கே செல்லாததால் அச்சமடைந்த தனபாலின் முதல் மனைவி தனது சகோதரியை காணவில்லை என வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

விசாரணை

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் இரண்டாவது மனைவியை கொலை செய்து புதைத்துவிட்டதாக தனபால் கூறியதாக தெரிகிறது. ஆனால், அப்போது மது போதையில் இருந்ததால் எங்கே புதைத்தேன் என்பதை மறந்துவிட்டதாகவும் தனபால் போலீசாரிடம் சொல்லியிருக்கிறார். இதனையடுத்து, தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முதலில் சடலத்தை ஆற்றில் வீசிவிட்டதாகவும் பின்னர், வேறு இடத்தில் புதைத்துவிட்டதாகவும் மாற்றி மாற்றி கூறியுள்ளார் தனபால்.

இந்நிலையில், 3 நாட்கள் கழித்து மேட்டுக்குடி என்ற கிராமத்தில் உள்ள கிணறில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. .

கைது

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் அது தனபாலின் இரண்டாவது மனைவிதான் என்பதை அறிந்தனர். இதனையடுத்து, மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து தன்பாலை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

இரண்டாவது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால், கணவனே கொலை செய்த சம்பவம் கரூர் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய விண்கல்.."இப்படி ஒன்ன நாங்க பாத்ததே இல்ல".. ஆராய்ச்சியாளர்கள் சொல்லிய ஷாக்-ஆன தகவல்..!

KARUR, MAN, ARREST, ATTACK, WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்