கடைசியா,.. "தலைவனையும், தலைவன் படத்தையும் பாக்காமலே போறேன்"... கலங்கடித்த 'ட்விட்டர்' பதிவு... அதிர்ச்சியில் 'விஜய்' ரசிகர்கள்!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் ரசிகர் ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பல பதிவுகளை பகிர்ந்து கொண்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தம் என்னும் பகுதியை அடுத்த பாலா என்னும் இளைஞர் ஒருவர், நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது ட்விட்டரில் அதிகம் வைரலாகி வருகிறது. பாலா என்ற அந்த இளைஞர், சில தினங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் மனவருத்தத்துடன் சில பதிவுகளை பகிர்ந்திருந்தார்.

தனது பதிவில், 'நான் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், வீட்டில் பிரச்சனை ஏற்பட்டதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்' என ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதே போல இன்னொரு பதிவில், 'தலைவரின் படத்தை பார்க்காமல் செல்கிறேன், தலைவரையும்' என நடிகர் விஜயை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
 

 

இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாது அனைத்து சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதன் காரணமாக #RIPBala என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் சாந்தனு உட்பட சில சினிமா பிரபலங்களும், இளைஞரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதே போல, எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு முடிவல்ல எனவும் பலர் தங்களது கருத்துக்களை இந்த சம்பவம் தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்