'எட்றா அந்த சாவிய...' 'விட்றா வண்டிய நகைக்கடைக்கு...' வீட்ட மொங்காம் போட்டது பத்தாதுன்னு... உச்சக்கட்ட துணிகரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நகைக்கடையில் புகுந்து கிலோ கணக்கில் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த விரிகோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் பொன் விஜய். இவர் ஜெயஸ்ரீ ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை மார்த்தாண்டத்தில் நடத்தி வருகிறார். மேலும் சில வர்த்தக நிறுவங்களின் உரிமையாளராகவும் இருக்கிறார். இந்த சூழலில் பொன் விஜய் வீட்டில் நேற்றிரவு மாடிக் கதவை உடைத்து கொண்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் பூஜை அறையில் இருந்த 65 சவரன் நகைகள், இரண்டு லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். அப்போது பொன் விஜய் உள்ளிட்ட குடும்பத்தினர் தரை தளத்தில் தூங்கி கொண்டிருந்தனர்.

மேலும் பூஜை அறையில் இருந்த நகைக்கடை சாவியையும் திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து மார்த்தாண்டத்தில் உள்ள ஜெயஸ்ரீ ஜூவல்லர்ஸ் நகைக்கடைக்குச் சென்றனர். அந்த கடையை திறந்து மூன்று கிலோ நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர்.

இதனையறிந்த பொன் விஜய் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர்கள் நகைக்கடையின் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் முகமூடி அணிந்து கொண்டு கொள்ளையர்கள் நகைக்கடையில் நுழைந்து கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் ஆகியவற்றின் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொண்டிருக்கின்றனர். ஒருவேளை வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.

GOLDTHEFT

மற்ற செய்திகள்