'திடீர்' உடல்நலக்குறைவு... அரசு மருத்துவமனையில் 'அனுமதிக்கப்பட்ட' இன்ஸ்பெக்டர்... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உடல்நலக்குறைவு காரணமாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர். அவர் என்ன காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்