”நமக்கு தாலி கட்டறதும் முக்கியம், இதுவும் முக்கியம்...” - விருந்தினர்களை ஆச்சர்ய படுத்திய நிகழ்வு... இப்படியும் ஒரு கல்யாணமா? - தமிழன்டா!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

ஐந்தாவது மற்றும் கடைசி நாளான இன்று, இலக்கை நோக்கி இந்திய அணி ஆடி வரும் நிலையில், 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில், சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த டிவி ஒன்றில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பப்பட்டது.

இதுகுறித்து அக்ஷய் நடராஜன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சென்னையில் வைத்து நடைபெறும் டெஸ்ட் போட்டியில், இரண்டு சென்னை வீரர்கள் ஆடிக் கொண்டிருக்கும் போது எப்படி போட்டியை பார்க்காமல் இருக்க முடியும்?' என குறிப்பிட்டுள்ளார்.



அது மட்டுமில்லாமல், இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்து வீச வந்த போது, அவரது ஓவரை 'அடித்து ஆடு சுந்தர்' என அங்கிருந்த ஒருவர், ஆவேசத்தில் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய நாளில், தமிழக வீரர்களான அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது திருமண நிகழ்வில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.

 

திருமண நிகழ்வில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்ட புகைப்படம், இணையத்தில் அதிகம் வைரலான நிலையில், பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர். கிரிக்கெட் என்பது சென்னைவாசிகளின் உணர்வுடன் கலந்த விஷயம் என்ற தொனியிலும் பலர் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்