இறப்பிலும் பிரியாத காதல்.. மனைவி இறந்த கொஞ்ச நேரத்திலேயே பிரிந்த கணவரின் உயிர்.. கலங்கிப்போன குடும்பத்தினர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சி அருகே மனைவி இறந்த கொஞ்ச நேரத்திலேயே அவரது கணவரும் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஓடும் ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகருக்கு பிடிவாரண்ட்.!

திருச்சி பாலக்கரை ரெட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு வயது 90. இவருடைய மனைவி சம்பூரணத்தம்மாள் (வயது 86). இந்த தம்பதிக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அனைவர்க்கும் திருமணமான நிலையில், தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரில் உள்ள மகன் வீட்டில் கிருஷ்ணன் வசித்து வந்திருக்கிறார்.

அவரது மனைவி சம்பூரணத்தம்மாள் காட்டூரில் உள்ள மற்றொரு மகன் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில், வயது முதிர்வின் காரணமாக சம்பூரணத்தம்மாள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு மரணமடைந்திருக்கிறார். இதனால் வீட்டினர் துக்கத்தில் ஆழ்ந்தனர். இதனையடுத்து, இந்த தகவல் உயிரிழந்த சம்பூரணத்தம்மாளின் கணவர் கிருஷ்ணன் மற்றும் பிற உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து கிருஷ்ணன் வசித்து வரும் பூமிநாத நகரில் உள்ள அவரது மகனின் வீட்டில் சம்பூரணத்தம்மாளின் உடலை வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்திருக்கின்றனர். தொடர்ந்து, அதற்கான பணிகள் நடைபெற்று வந்திருக்கின்றன. சம்பூரணத்தம்மாளின் உடலை ஆம்புலன்சில் ஏற்றும்போது பூமிநாத நகரில் இருந்த கிருஷ்ணனும் காலை 6.30 மணியளவில் மரணமடைந்திருக்கிறார். இதனால் அவரது மகன் மற்றும் மகள்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, மண்ணச்சநல்லூரில் உள்ள மகன் வீட்டில் கிருஷ்ணன் - சம்பூரணத்தம்மாள் உடல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதனிடையே அவர்களது உடலுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மனைவி இறந்த ஒரு மணி நேரத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | மனுஷன் எல்லா இடத்துலயும் இருக்காரு.. FIFA உலகக்கோப்பை போட்டியில் தோனி ரசிகர் வச்சிருந்த போஸ்டர்.. வைரலாகும் Pics..!

HUSBAND, WIFE, TRICHY, OLD COUPLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்